காவிரி நீர் வழக்கு:நாளை மறுநாளுக்கு (மே-16) விசாரணை ஒத்திவைப்பு!உச்ச நீதிமன்றம்

வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நாளை மறுநாளுக்கு விசாரணை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

காவிரி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.காவிரி வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

இதேபோல்  இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாத நிலையில் மே மூன்றாம் தேதி மத்திய அரசு சார்பில் மேலும் பத்து நாட்கள் காலக்கெடு கோரப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றதால் வரைவுச் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என மே எட்டாம் தேதி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது. அன்று நடைபெற்ற விசாரணையில் காவிரி தொடர்பான வரைவுச் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், பிரதமரும் அமைச்சர்களும் டெல்லி திரும்பியபின் ஒப்புதல் பெறப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மே 14ஆம் தேதி நீர்வள அமைச்சகச் செயலாளர் நேரில் ஆஜராகி வரைவுச் செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக வரைவுச் செயல் திட்டம் தாக்கல் செய்வதைத் தள்ளிப்போடுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நாளை மறுநாளுக்கு விசாரணை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறுகையில் ,காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார் உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும் என்றும்  மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.மேலும்  காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும்.காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவித்தார்.

இதேபோல் உச்ச நீதிமன்றம் கூறுகையில் வரைவு செயல் திட்டத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment