காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் 4 பேர் சடலங்களாக மீட்பு..!

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரை தீயணைப்புத்துறை, காவல்துறை தேடிவருகிறது.

மேட்டூர் அருகே ரெட்டியூரில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 5 பேரில் இருவர் சடலமாக மீட்டிருந்த நிலையில்  தற்போது காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்! – 4 பேர் சடலங்களாக மீட்பு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment