காலாப்பட்டு சிறை பெயர் மாற்றப்படும் : கிரண்பேடி

காலாப்பட்டு சிறை, காலாப்பட்டு ஆசிரமம் என பெயர் மாற்றப்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு காலாபட்டு சிறையை ஆய்வு செய்த துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, கைதிகளுக்கு யோகா கற்று கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி, கைதிகளுக்கு வாரந்தோறும்  யோகா கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காலாபட்டு சிறையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கிரண்பேடி, சிறை என்பது கைதிகள் திருந்தும் இடமாக மாற அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முறையாக காலாப்பட்டு சிறைக்கு, காலாப்பட்டு ஆசிரமம் என பெயர் மாற்றம் செய்து அறிவிகக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment