கபடி : அரையிறுதியில் இந்திய அணி….!!! களிப்பில் வீராங்கனைகள்….!!!

இந்திய மகளீர் அணி கபடி போட்டியில், இலங்கை மற்றும் இந்தனோஷியா அணிகளை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் இந்திய மகளீர் அணி இலங்கையுடன் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதியில் 32-11 என்ற புள்ளிகணக்கில் அபார வெற்றி  பெற்றது.
பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இந்தனோஷியாவை எதிர்கொண்டு அப்பறமா விளையாடி வெற்றி பெற்றனர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பயல் சௌத்ரி, சாஹுசி குமாரி, ரன்தீப் கேரா, ரீத்து நேகி ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் 54-22 என்ற புள்ளிகணக்கில் இந்திய அணி வென்றது. இந்த பிரிவில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றதின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மீண்டெழுந்த ஆடவர் அணி : தென்கொரியாவுடன் 23-24 என்ற புள்ளிகணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி செவ்வாய்க்கிழமை தாய்லாந்தை 49-30 என்ற புள்ளிகணக்கில் வீழ்ந்து மீண்டெழுந்து, ஏற்கனவே வங்கதேசம், இலங்கை அணிகளை வென்றிருந்த நிலையில், இந்திய ஆடவர் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment