கனடாவில்:இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு…!!

கனடாவின் மிஸ்ஸிஸாகா பகுதியில்  ‘பாம்பே பெல்’ எனப்படும் இந்திய உணவகம் உள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் உணவருந்தி கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உணவகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள காவல்துறையினர், குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், குண்டு வைத்ததாக சந்தேகப்படும் 2 பேரின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment