கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை….

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 540 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி மீனவர்களை விரட்டி அடித்தனர். மேலும், மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் குறைந்த அளவு மீன்களோடு மீனவர்கள் கரை திரும்பினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment