ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்பு!

இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு கூடுதல் நீதிபதிகள்  பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால் தற்போது 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.புதிதாக ஏழு நீதிபதிகளை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி வழக்கறிஞர்களாக பணிபுரிந்துவரும் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியபிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோரை புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் இவர்கள் ஏழு பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment