உ.பி.-ல் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்!16 பேர் உயிரிழப்பு!50க்கும் மேற்பட்டோர் மாயம்!

மேம்பாலம் கட்டுமான பணி வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே  நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Image result for Uttar Pradesh Bridge Collapse

மேலும், இடிந்து விழுந்த மேம்பாலம் சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 12 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

எனினும் இடிபாடுகளில் சிக்கி  16 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment