இனி வாட்ஸ்அப் குரூப் ஓபன் பண்ணனும்னா காவல் நிலையம் போனும் பாத்துக்கோங்க

மனிதர்களின் ஒரு கையாக இன்று விளங்கிக்கொண்டிருப்பது கைபேசிகள்  இவையே இல்லையென்றால் அன்றாட வாழ்கையில் அடுத்த நகர்வுக்கு செல்வது சிரமமாக ஆகிவிட்டது. இதில் சமுக வலைத்தளங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.சமூக வலைதலங்களால் பல  பல நல்லது நடந்தாலும்  இதன் மூலம்  பல பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சமுக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருப்பது முகநூல் மற்றும் வாட்ஸ் அப்  இந்த இரண்டும் மக்களிடயே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது .இவற்றின் முலம் வாழ்த்து செய்திகள்,புகைப்படம் ,வீடியோ ,கோப்புகள் என பல்வேற்பட்ட  நிகழ்வுகளை நிகழ்த்த முடியும் .இதனால் இந்த ஆப்கள் அன்றாடம் புது புது மாற்றங்களை கொடுத்து வருகிறது.

இந்தியாவில் சமுக வலைதழ்ந்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என சமிபத்திய பல தகவல்கள் தெரிவிக்கிறது.இந்நிலையில் காஷ்மீரில் வன்முறைகள் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது சமிபத்தில் அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது .

இந்நிலையில் அம்மாநிலத்தில் வாட்ஸ் அப் போன்ற சமுகவலைதளங்களை கண்காணிக்க அம்மாநிலத்தில்   முடிவு செய்துள்ளனர் வாட்ஸ் அப் குரூப் ஒருவர் உருவாக்க வேண்டும் என்றால் அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அனுமதிபெற்று தங்கள் குரூப்பின் பெயர் அதன் நோக்கம் குழுத்தலைவர் யார், எத்தனை பேர் உள்ளனர் என்ற முழுவிவரத்தையும் காவல்நிலையத்தில் புர்த்திசெய்து கொடுக்க வேண்டும் ,இதனால் குற்றங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரலாம் என முடிவு செய்துள்ளனர்.இது நாடு முழுவதும் செயல்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர் .

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment