இனி இடைத்தரகர்களுக்கு தடை : கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை

சார்பதிவாளர் ஆபிஸில் எப்போதும் நிலம் விற்பவர்கள், வாங்குபவர்களை விட அதிகமாக காணப்படுபவர்கள் இடை தரகர்கள் தான். அவர்களின் ஆதிக்கம் அங்கே மட்டுமல்ல மற்ற பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகமாகத்தான் இருக்கும்.
அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது அவ்வாறான இடை தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே இருக்க கூடாது எனவும்,  அவ்வாறு இடைத்தரகர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment