இடைத்தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல்..!! ஜன.,21 தேதி வெளியிடப்படும்..!தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!!

திருவாரூர் இடைதேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21 ஆம் தேதி வெளியிடுவதாக தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டியது ஆனால் புயல் பாதித்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் பட்டியல் திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு அவகாசம் கோரினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் இதே போன்று அவகாசம் கோரியதால், ஜனவரி 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதியைத் தவிர்த்து ,அறிவிக்கப்பட்ட மற்ற அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment