சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, சீனா, பூடான் என மூன்று நாடுகளும் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி சாலைப்பணிகளை மேற்கொண்டது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. சீனா, இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்திய ராணுவம் மீது போர் தொடுக்கப்போவதாக சீனா மிரட்டியது . இதனால் சிக்கிம் மாநில எல்லையில் இரண்டு மாதம் போர்ப்பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று சீன நாட்டு எல்லைக்குள் சமீபத்தில் ஊடுருவி பின்னர் அது சீன எல்லைக்குள்ளே சிக்கிம் பகுதியில் நொறுங்கி விழுந்ததாகவும் சீனா இந்தியா மீது புகார் கூறியது.
இது குறித்து சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் ‘இந்தியா ஆளில்லா விமான ஊடுருவலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது. மேலும் ஆளில்லா விமானத்தை இழந்ததை விட மோசமா விளைவுகளை இந்தியா சந்திக்கும் என கூறி உள்ளது.
அந்த செய்தியில் கூறியிருப்பது, ‘சீனா மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையே நீண்ட காலத்திற்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்ட அதே இடத்திலேயே இந்த ஊடுருவல் நிகழ்ந்தது உள்ளது.
மிகுந்த கவனத்துடன் இருபுறமும், இரு தரப்பினரும் செயல்பட வேண்டும். ஆனால் இந்தியா தெளிவாக நடந்து கொள்ளவில்லை.
இது ஒரு தொழில்நுட்ப சிக்கலாக இருந்தாலும்,ஏன் தவறான இடத்தில் தவறான நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் நடக்கிறது? ஒரு தொழில்நுட்ப தோல்வி காரணமாக ஒரு சீன ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் பறந்து சென்றால்,அத்தகைய சம்பவம் வெறும் விபத்து என்று இந்தியா விளக்கத்தை ஏற்குமா? ‘என செய்தி வெளியாகி உள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…