ஆப்ரிக்காவில் சுற்றுலாப் பயணியை பிறாண்டிய சிறுத்தை..!

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணியை சிறுத்தை விளையாட்டுத்தனமாக பிறாண்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன. வனப்பகுதியில் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்றினை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் வாகனத்தின் அருகே வந்த சிறுத்தை சுற்றுலாப் பயணி அணிந்திருந்த காலணியை நுகர்ந்து பார்த்த பின் தனது நகங்களால் அதனை இழுக்க முயன்றது.  இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சுற்றுலா பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுத்தை மீண்டும் வனத்திற்குள் சென்று விட்டது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment