ஆதி தான் என்னுடைய சக்களத்தி! நடிகை குஷ்பு அதிரடி!

ஆதி தான் என்னுடைய சக்களத்தி. அதிரடியாக பேசிய குஷ்பூ.

நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் நான் சிரித்தால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றி சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு  கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம், எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. நானும் கணவரும் சிறு வயதிலிருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சரியான நேரத்தில் சம்பளம் போய் சேர்ந்துவிடும்.

தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லாமே சுந்தர்.சி தான் செய்கிறார்.  எங்களுக்கு உயிர் மூச்சே சினிமாதான் என்று கூறியுள்ளார். மேலும், தூக்கத்தில் எழுந்து பார்த்தால் சுந்தர் சி ஆதியுடன் தான் பேசிக் கொண்டிருப்பார். ஆதி என்னுடைய சக்களத்தி என்று கூட சொல்லாம் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.