அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 2 தமிழர்கள் உள்பட 4 இந்திய வம்சாவளியினர் வெற்றிபெற்றனர்.
அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலர் போட்டியிட்டனர். இருப்பினும் ஏற்கனவே அங்கு பிரதிநிதிகள் சபை எம்.பி.க்களாக இருந்து வந்த 4 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. அவர்கள் 4 பேரும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 45), இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் பிறந்த தமிழரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி ஜே.டி. திகான்வ்கெரை தோற்கடித்தார்.
பிரமிளா ஜெயபால் (53), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். சென்னையில் பிறந்த இந்த தமிழ்ப்பெண், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லரை வீழ்த்தினார்.
ரோகன்னா (42) கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரான் கோஹெனை வீழ்த்தி வெற்றி கண்டார்.
அமி பெரா (53). கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ பிராண்டை தோற்கடித்தார். அமி பெரா தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…