அப்பா ராட்டினம் சுத்தனும்..மாற்றுத்திறனாளி மகளை தன் தோளில் சுமந்து ஆசையை நிறைவேற்றிய அன்பு தந்தை.!நெஞ்சை வருடிய சம்பவம் வீடியோ உள்ளே

  • ராட்டினத்தில் சுற்ற ஆசைப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகளை தோளில் சுமந்து சென்ற அன்பு தந்தையின் செயல்
  • மகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்திய அன்பு தந்தைக்கு பாராட்டு தந்தையின் செயல் வீடியோவாக  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சாதரணக் குழந்தைகள் போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளால் வளர்வது சற்று இயலாத சவலான ஒன்று. மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உதவி மற்றும் உடன் இருப்பவர்களின்   ஒத்துழைப்பை நம்பி  இருக்க வேண்டி உள்ளது.இவர்களுக்கு தாய்-தந்தையின் அரவணைப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.

இதில் பெற்றோரின் பங்கு மிகவும் அளப் பெரியது. அதனை வெறும் வார்த்தையில் எழுத்தில் சொல்லமுடியாது.இவ்வுலகில் இவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இவர்களை பேணி காப்பற்றி வளர்க்கக்கூடிய பெற்றோர்கள்  தெய்வங்களுக்கு ஒருபடி மேல் என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனை கஷ்டங்களை தாங்கி கொண்டு அக்குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கின்றனர். அவர்களின் வேதனை எல்லாம் தனக்கு பின் தன் பிள்ளையை பேணி யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி மனதில் ரனமாய் கிடந்து அவர்களை வாட்டி வதைக்கிறது.இவ்வாறு சவால் நிறைந்த வாழ்க்கையில் ஒரு அன்பு தந்தை தனது அன்பு மகளின் தீராத ஆசையை நிறைவேற்றி அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.

மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை ஒரு நபர் தன் இருசக்கர வாகனத்தில் ராட்டினம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து  வந்து அந்த ராட்டினத்தில் ஆட வைக்க அதை நோக்கி தூக்கி வருகின்றார். மற்ற குழந்தைகள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் ராட்டினத்தில் இருந்த படி இந்த நிகழ்வை பார்வை இடுகின்றனர்.

பெண்ணை தூக்கி வந்தவர் அந்த பெண்ணின் தந்தை எனவும் தனது மகள் ஆசைப்பட்ட ராட்டினத்தில் அவளை சுற்ற வைத்து  அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி அதனை கண்டு ரசித்த அவரது செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மாற்றுத்திறனாளியான தன் மகளுக்கு வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தந்தை என்று பலரும் இணையத்தில்  விடியோவை தங்களது தனிப்பட்ட பக்கங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

தாயும்- தந்தையும் நிகரில்லை கடவுளுக்கு .,அதற்கும் மேல்…உண்மை தானே உறவுகளே..! “

தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் மாட்டுப்பொங்கல்- வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்….

kavitha

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

2 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

2 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

2 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

3 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

3 hours ago