ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலைக்கு மனைவி காரணமா..?

மதுரை எஸ்.எஸ் காலனியை சார்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.இவரது மனைவி சுபா.அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று இரவு ரஞ்சித்குமார் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்த போது அங்கு வந்த  5 மர்ம நபர்கள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினர்.அப்போது காயமடைந்த ரஞ்சித்குமாரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர்.அங்கு ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டது.
ஆனால் சிகிக்சை பலனின்றி ரஞ்சித்குமார் இறந்தார்.இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில் ரஞ்சித்குமார் மனைவி சுபா பிரிந்து வந்த போது பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ,அதனால்  சுபா , பிரகாஷ் இருவரும் சில பேரை வைத்து இந்த கொலையை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

author avatar
murugan