ரோஹித் பக்கமே குறிவைத்து அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..! பறந்து பறந்து பீல்டிங் செய்த ஹிட் மேன்..!

  • இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்த கேட்ச்சை பிடிக்காமல் விட்டனர்.
  • ஆனால் ரோஹித் ஷர்மாவின் பீல்டிங்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
  • இப்போட்டியில் ரோஹித் பக்கமே குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்தனர்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முதல்  டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாக  இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்த கேட்ச்சை பிடிக்காமல் விட்டனர். ஆனால் ரோஹித் ஷர்மாவின் பீல்டிங்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 17-வது ஓவரை தீபக் சஹார் வீசினார்.

முதல் பந்தை  ஹெட்மயர் தூக்கி அடிக்க பவுண்டரி லைனில்  இருந்த ரோஹித் ஷர்மா பறந்து தடுத்தார்.அதற்கு முன் ஹெட்மயர் கேட்ச்சை பவுண்டரியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் பிடிக்காமல் விட்டார்.ஆனால் அருகில் இருந்த ரோஹித் ஷர்மா பந்தை  பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார்.

Image

பின்னர் போலார்டு அடித்த பந்து ரோஹித் ஷர்மாவை நோக்கி வந்தது அதை ரோஹித் ஷர்மா பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து பின்னர் பீல்டிங்கில் மிரட்டிய ரோஹித் போலார்டு கேட்ச்சை விட்டது  ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் , பின் ஹெட்மயர் கேட்ச்சை  பிடித்து ஹிட்மேன் அசத்தினார்.இப்போட்டியில் ரோஹித் பக்கமே குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan