INDvsWI:தொடக்க வீரர்களின் சதத்தால் கதி கலங்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.!

  • இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் சதம் விளாசினர்.
  • தற்போது இந்திய அணி  39 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் குவித்தனர்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச முடிவு செய்தார். இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,மற்றும் கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய ரோஹித் , கே .எல் ராகுல் இருவரும் அரைசதம் விளாசினார்.

பின்னர் இவர்களின் அதிரடி கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய ரோஹித் முதலில் சதம் விளாசினார்.பின்னர் அடுத்த சில நிமிடங்களில் கே .எல் ராகுல் சதம் விளாசினார். சதம் அடித்த அடுத்த இரண்டு பந்தில் கே.எல் ராகுல் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தபோது ரோஸ்டனிடம்  கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் பந்திலே ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி  39 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் குவித்தனர்.

 

 

author avatar
murugan