இவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும் -உத்திரபிரதேச முதல்வர்

இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர்.

அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடிராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இதுகுறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த தருணத்திற்காக எத்தனையோ பேர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. ராமர்கோவில் அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை இனி முன்னெடுத்து செல்ல வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.