ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா – குவியும் பாராட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் சாப்பிடுபவர்கள் தற்போது உழைப்பும் இன்றி உணவும் என்று கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல நடிகர்கள் பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் மாஸ் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா தனது அறக்கட்டளை மூலமாக தானாகவே உதவ முன் வந்துள்ளார்.

இதற்காக நிதி திரட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவும் உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 40 சதவீதம் நிதி திரட்டி விட்டதாகவும் மீதி தொகை திரட்டி விட்டு உதவி செய்ய ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். பிரனிதாவின் இந்த செயலுக்கு திரையுலக பிரபலங்கள் சாதாரண மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவருமே பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

author avatar
Rebekal