உறியடி 2 உங்களை எண்டர்டெயின் பண்ணாது ஆனால் டிஸ்டர்ப் பண்ணும் சூர்யா

  • நடிகர் சூர்யா தயாரிப்பில், 2 டி நிறுவனம் சார்பில் ,சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’.இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.
  • அந்த விழாவில் நடிகர் சூர்யா பேசினார்.

நடிகர் சூர்யா தயாரிப்பில், 2 டி நிறுவனம் சார்பில் ,சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’.இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா நேற்று  சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா, இயக்குனர் விஜயகுமார்,ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ்,இணை தயாரிப்பாளர் ராஜசேகர், கற்பூர சுந்தரபாண்டியன், பாடலாசிரியர் நாகராஜி, விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன்.

அதில் எனக்கு  ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவர் படம் பற்றி இவ்வளவு தெளிவாக பேசியது என்னை மிகவும் ஈர்த்தது. அவர் படத்தைப் பற்றி , ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும். என்று  கூறிய வார்த்தைகள் மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment