வங்கி மேலாளரின் தாலிச்சங்கிலியை பறித்து தப்ப முயன்ற 2 திருடர்களை, பொதுமக்கம் பிடித்தனர்..!

திருச்சி அருகே வங்கி மேலாளரின் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற 2 திருடர்களை, பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர்.

தோகூர் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் கற்பகவள்ளி, இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரது 6 சவரன் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பினர். அவர்கள் கிளியூர் வழியே பைக்கில் அதிவேகமாகச் சென்றபோது சந்தேகமுற்ற பொதுமக்கள், இருவரையும் வழிமறித்தனர். ஆனால், அரிவாளைக் காட்டி மிரட்டிய அவர்களை, கூட்டத்தினர் லாவகமாக மடக்கிப் பிடித்தனர்.

2 பேரையும் அடித்து உதைத்த கிராம மக்கள், கைகளை பின்னால் கட்டிய நிலையில், திருவெறும்பூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கார்த்தி, பிரவீன் என்பதும், வங்கி மேலாளரின் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment