கோவில் தேரில் ஏறி தீபாராதனை காட்ட முயன்றபோது குருக்கள் தவறி விழுந்து பலி!

திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்றுஆடிப்பூரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் குருக்கள் முரளி அவர்கள், தேர் புறப்படுகையில் தீபாரதணை காட்டினார்.

பிறகு நடுஇரவில், தேரடிக்கு தேர் வந்தது. அப்போது தேரின் மேலே ஏறி அம்மனுக்கு தீபாராதனை கட்ட முற்பட்டார். அப்போது தேர் நகர்ந்ததால் முரளி குருக்கள் கீழே விழுந்தார். பிரதான சாலையில் விழுந்ததால் அதிகமாக அடிபட்டு ரத்தம் நிறைய வெளியேறியது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்கையில் உயிரிழந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.