“இந்தியாவுக்கு இந்த ரெண்டு அணி தான் போட்டி”.. குல்தீப் கணிப்பு

  • குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
  • பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு கடும் போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் குல்தீப் யாதவ், பல இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசி ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதனால் உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் நிச்சயம் இவர் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு கடும் போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு அணிகளும் சமீபத்தில் மிக சிறப்பான அணியாக செயல்பட்டு வருகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
Vignesh

Leave a Comment