தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகன்!திடுக்கிடும் தகவல்!

  • தந்தை இறந்த சோகம் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவன்.
  • காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் ஆவார். இவர் மதுரை அண்ணா பல்கலை கழகத்தில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம் பி ஏ பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் அனைத்து மாணவர்களும் அவரவர் ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர்.இவர் ஊருக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது அவரது தந்தை மோகன் மாரடைப்பால் இறந்து விட்டதாக உறவினர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தந்தை இறந்ததை தாங்க முடியாமல் மனமுடைந்த மாணவன் மற்ற மாணவர்கள் புறப்பட்டு சென்றவுடன் கத்தியால் கையையம் கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அதில் பயனில்லாத காரணத்தால் அங்கிருந்த கயிற்றை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர்  மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.