” Walmart ” மாலில் நடந்த துப்பாக்கி சூடு..இரண்டு பேர் பலி.!

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ சிட்டியில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி வந்த நபர், திடீரென தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர்.

ஏ.ஆர் வகை துப்பாக்கி ஏந்திய நபர் தனது வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது வால்மார்ட் சுவரில் மோதிய பின்னர் வாகனம் தீப்பிடித்த பிறகு, அந்த நபர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார் என தகவல் வெளியானது. காயமடைந்த நான்கு பேரும் தற்போது புனித எலிசபெத் சமூக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்தியவர் தனது காயங்களில் இருந்து தப்பினாரா என்பது தெரியவில்லை. இந்த மையத்தில் உள்ள ஊழியர்கள் ஊடகங்களிடம் சுமார் 200 தொழிலாளர்களுடன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்களை ஒரு அறையில் பூட்டிக் கொண்டு தப்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.