இரண்டாவது திருமணம், மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்த நடிகை.!

  • நடிகை திவ்யா உன்னி வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.
  • திவ்யா உன்னி கடந்த 2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார்.

நடிகை திவ்யா உன்னி மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக வலம் வந்தார்.இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு சபாஷ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் வேதம், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்தார். இவர் 2002-ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

பின்னர் நடிகை திவ்யா உன்னி  2018-ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.அங்கு ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.தற்போது நடிகை திவ்யா உன்னி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.

author avatar
murugan