வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள்!

வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள்.

தமிழர்கள் குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. அதிலும் குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோய்

இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடுபடலாம்.

மூலம்

மூலம் சம்பந்தமான பிரச்ச உள்ளவர்களுக்கு இந்த பூ மிகவும் நல்ல மருந்தாகும். எனவே, மூலம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடல்சூடு

சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால், உடல்சூடு  தணிந்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.