திருப்பூரை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் கதவை தாழிடாமல் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே இருந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை விழித்தவுடன், தாழிடாமல் இருந்த கதவை லேசாக தள்ள, கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது. இதனையடுத்து குழந்தை தாய் கதவை பல வழிகளில் திறக்க முயற்சி செய்தாலும் அது இயலாமல் போய்விட்டது.
இந்நிலையில், அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டெட்டுத்துள்ளனர்.