நிலச்சரிவு : இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்பு !

கேரளாவில்  கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88  அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்த இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்கப்பட்டன. கேரளாவில் காவலப்பராவில் உள்ள முத்தப்பங்குன்னு மலையில் கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது.

அங்கு 2 மாத குழந்தை உட்பட  5 குழந்தைகளுடன் வசித்து வந்த விக்டர் மற்றும் தோமாவின் வீடு மிகவும் சேதமடைந்தது.இதில் அனகா (8) மற்றும் அலீனா(4) என்ற சகோதரிகள் சிக்கி கொண்டனர்.இவர்களின் தந்தை விக்டர் குழந்தைகளின் அழு குரல் கேட்டு மீட்க கடுமையாக போராடினார்.

ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இடிபாடுகளில் சிக்கிய இரு சகோதரிகளின் உயிர் ஒன்றாக பிரிந்தது. எப்போதும் ஒன்றாக கட்டிப்பிடித்து உறங்கும் இந்த சகோதரிகளின் உயிர் இருவரும்ஒன்றாக பிரிந்தது .

 

author avatar
murugan