அரசனுக்கு எதிராக செயல்பட்டதால் தாய்லாந்து மன்னனின் 4வது மனைவிக்கு அரசி மரியாதை ரத்து!

தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு பிறகு அவரது மகன் மகா வஜ்ராலங்கோன் தாய்லாந்து நாட்டின் மன்னராக பதிவி ஏற்றுகொண்டார். இந்த பதவியேற்பு விழா மே மாதம் நடைபெற்றது.
பதவியேற்புக்கு முன்னர் சுதீடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் மகா வஜ்ராலங்கோனின் பாதுகாவலராக இருந்து வந்தார். இவர் செவிலியராக பணியாற்றியுள்ளார். ராணுவ தளபதியாகவும் இருந்துள்ளார்.
இவர் மன்னர் மகா வஜ்ராலங்கோனின் 4வது மனைவியாவார். இவர் அரசி மரியாதைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், அரசருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி அவருக்கு வழங்கபட்டிருந்த அரசி மரியாதைகள் பறிக்கப்பட்டுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.