அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளை தள்ளுபடி செய்த- உயர்நீதிமன்றம்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த  பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் அத்திவரதர் வைபவம் தொடர்பாக துணை இராணுவ பாதுகாப்பு , மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி , குளிர் சாதன வசதி போன்ற 6 வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் விசாரித்தது. வழக்கில்  மூலவர் தரிசனதத்திற்கு அனுமதி ஏற்பாடு செய்யப்படும் என அரசு பதில் அளித்ததால் அரசின் பதிலை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் அத்திவரதர் வைபவம் தொடர்பாக தொடரப்பட்ட 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து.

author avatar
murugan