3 ஆண்டுகள் சிறை தண்டனை.! தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் பதவி பறிப்பு.! அதிரடி காட்டிய ஆந்திர முதல்வர்.!

  • ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

ஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அதில் மார்ச் 2-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இதுகுறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்