ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் மினி லாரியை மறித்து லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் எஸ்.பி. சரவணன் கண்ணெதிரே நடந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றியதோடு துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.சரவணன்.