சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ரோஹித் சர்மா என்ன கூறினார் தெரியுமா..?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி சுவாரசியமான ஒன்றை கூறியுள்ளார்.

 கொரனோ வைரஸ் தாக்கம்  நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்,மேலும் விரைவில் ஐபிஎல் போட்டியை நடித்த முடிவு எடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் அவரிடம் கேட்டு வந்தார்கள் அதில் முக்கியமாக நீங்கள் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, ரோஹித் சர்மா கூறியது, இங்கிலாந் கிரிக்கெட் வீரர் ஜாசன் ராய் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங் அணி பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, மிகவும் சிறந்த அணி என்று கூறியுள்ளார், அடுத்ததாக ஊரடங்கு முடிந்த பின் அடுத்து நீங்கள் என்ன செய்ய போறீர்கள் என்று கேட்டதற்கு மீண்டும் கிரிக்கெட் ஆட போகிறேன் என்று கூறியுள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.