மீண்டும் உருவாகிறதா ரோஜா-2.! ஹீரோ யார் தெரியுமா.!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை சிறிது ஒதுக்கி வைத்து விட்டு ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார்.பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகளை நடுத்த கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னரே முடியும் என்றும், அவ்வாறு முடிந்தாலும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி தான் வழங்கப்படும். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியிலே நூற்றுக்கணக்கானவர்கள் நடிக்க வேண்டியதால் விரைவில் படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் மணிரத்னம் அவர்கள் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியான ‘ரோஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு துல்க்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே துல்க்கர் மணிரத்னம் இயக்கத்தில் ஒகே கண்மணி படத்தில் நடித்து மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது