தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் தோசை செய்யும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரை யுலகில் பிஸியாக உள்ளாராம். இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் டோலிவுட்டின் முன்னணி இளம் நடிகரான நித்தீனுடன் RangDe என்ற தெலுங்கு படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
மேலும் படங்களின் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இணையதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் விடியோக்களை வெளியிடும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் தோசை செய்யும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.