வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்த முடிவு -புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில்,மத்திய பட்ஜெட்டில் அதிகமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதற்கான நிதி எங்கிருந்து வரும் என தெரியவில்லை என்று கூறினார்.