தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் பால் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்தும்,  பால் விற்பனை விலையானது ஆறு ரூபாய் அதிகரித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலையேற்றம் இன்று இரவு 12 மணி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளை காலை இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

கால்நடை தீவனங்கள் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் தற்போது விலை ஏற்றபட்டுள்ளது. கடைசியாக 2014ம் ஆண்டு பால் விலை ஏற்றப்பட்டது அதன் பிறகு, 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொள்முதல் விலையும், விற்பனை விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.