3 மணி நேரம் எரிந்த மின்மாற்றியால் மின்சாரம் பாதிப்பு ..!

  • புகழூரில் துணை மின் நிலையம் உள்ளது. 
  • மூன்றாவது மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள துணை மின் நிலையம் உள்ளது. இங்கு 3 மின்மாற்றிகள் உள்ளன. இந்த மின்மாற்றி 250 கேவி மின்சாரத்தை 110 மின்சாரமாக குறைத்து கொடுக்கும் வேலையை செய்கின்றது.

இந்த மின் நிலையத்தில் இருந்து கரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட மின் கசிவால் மூன்றாவது மின்மாற்றிகள் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அந்த மூன்றாவது மின்மாற்றியில் 47,000 கான்சோமர் என்னும் ஆயில் இருந்ததால் மின்மாற்றி கரும்புகையுடன் எரிந்தது.

இதை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த 50-க்கும் தீயணைப்பு படை வீரர்கள் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். 3-வது மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan