பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் ..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர் ஒருவர், தனது சொந்த ஸ்கூட்டரையே தீவைத்து கொளுத்தினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை காரணங்காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியைத் தொண்டர் ஒருவர், தனது ஸ்கூட்டரை நடுவீதியில் தீவைத்து கொளுத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment