#BREAKING:ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி.!

ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடைக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சமீபத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ஜெயலலிதா சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

author avatar
murugan