பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது-இந்தியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புவதாக அவர்களுக்கு எதிராக தவறான தகவல்கள் இந்தியாவில் பரப்பப்படுவதாக இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறுபான்மையினரின் பாதுகாக்க இந்தியா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கூறுகையில்,இந்திய அரசு கொரோனா விவகாரத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே குறிவைக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில்தான் தான் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இது குறித்து கூறுகையில்,பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது.கொரோனவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளாமல் அண்டை நாடுகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.