இந்தியாவில் ஒரே நாளில் 10,000 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் எந்த இடத்திலுமே கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் வீரியம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தில் தற்போது உள்ளது.

இந்நிலையில் தற்போது மொத்தமாக இந்தியா முழுவதும் 257,486 பேர் கொரோனவல் பாதிக்கப் பட்டுள்ள நிலையில்,7,207 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 123,844 பேர் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 10,864 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 261 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உயிரிழப்பின் வீதம் குறைவாக இருந்தாலும், நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

author avatar
Rebekal