அரபிக்கடலில் உருவானது நிகர்சா புயல்.. தீவிரமடையுமென வானிலை மையம் எச்சரிக்கை!

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. மும்பை அருகே மையம் கொண்டுள்ள இந்த புயல்,  11 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாகி, நாளை பிற்பகல் மகாராஷ்டிரா-குஜராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்த புயலால் வட கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மணிக்கு 95-105 கி.மி. வரை காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.