சொந்த மண்ணில் இந்தியாவை வதம் செய்து இரண்டாவது முறையாக ஒயிட்வாஷ் செய்த நியூஸிலாந்து ..!

இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டி  கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் அடித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 235 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

7 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மோசமாக ஆட்டத்தால் 124 ரன்களில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் ஒருவர் கூட 25 ரன்கள் மேல் எடுக்கவில்லை இதை தொடந்து இறங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது விளையாடிய டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

author avatar
murugan