BREAKING: அரியலூர் ,கள்ளக்குறிச்சிக்கு புதிய மருத்துவ கல்லூரிகள்-மத்திய அரசு ஒப்புதல்.!

  • ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது.
  • இந்நிலையில் தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

சமீபத்தில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று 2 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளது.ரூ.650 கோடியில் மத்திய , மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து. மத்திய அரசு இந்தியா முழுவதும் 2020-21-ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு மாநில அரசு  சார்பாக அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

image

இதில் தமிழக அரசு சார்பில் அனுப்பிய திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல்,திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரூ.3200 கோடி செலவில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது.

தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.

author avatar
murugan