கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.இதையெடுத்து இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை திறக்கவந்தபோது பாட்டில் கிடப்பதை பார்த்து இந்து முன்னணி அமைப்பினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் விரைந்து வந்தபோலீசர் விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதை அடுத்து கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.