நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா என உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சமீபத்தில், கரூர் மாவட்டத்தில், நில ஆக்கிரமிப்பாளரை காட்டி கொடுத்ததன் காரணமாக,

தந்தை, மகன் இருவரும் வெட்டி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கொலைகாரர்கள் சரணடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குக்களை சுட்டிக்காட்டி, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.